தேடல் 7
பகுதி 7 வரதராஜன் மாதவன் அனுப்பின ஆளுங்களை பார்த்தவுடன் கோபம் தலைக்கேற கத்திக்கொண்டிருந்தார். இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் அதிர்ந்து போயினர். அப்புறம் நிதானமாக சார் மாதவன் யார் தெரியுமா அவர் நினைச்சா உங்களை என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்று மிரட்டல் தொணியில் அவர்கள் ஆட்கள் பேச ஆரம்பிக்க, வரதராஜன் மிகவும் கோபமாக என்ன பண்ணுவாராம் பண்ண சொல்லு என் சர்வீஸ்ல நான் பார்க்காத மிரட்டல்களா வெளியே போங்க என்று விரட்டினார். அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினர். இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வினய் குழப்பத்துடனும் ஒரு வித பதட்டத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வெளியேறும் போது வினயை பார்த்துக்கொண்டே வெளியேறினர். வினய் அய்யாச்சாமியிடம் யார் இவர்கள் எதுக்கு இங்க வந்து வரதராஜன் சாரை மிரட்டிட்டு போறாங்க என்று கேட்டான். தம்பி இந்த மாதிரி நிறைய பேர் வந்து மிரட்டிட்டு போவாங்க அய்யா வாதாடுறா கேஸ்ல எதிர் தரப்புல இருந்து நிறைய மிரட்டல் வரும் அதுல இவுங்களும் ஒரு தரப்பு அவ்வளவு தான் ஆனால், இவுங்க ரெம்ப பெரிய இடம் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் அய்யாசா...