Posts

Showing posts from May, 2017

Facebook page

லட்டும் கடலை உருண்டையும்

ஒரு ஊரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. அந்த ஊரில் எப்போதும் அந்த இனிப்பு கடைக்கு என்றே தனிக்கூட்டம் அலைமோதும். வார இறுதி நாட்களில் மிகவும் கூட்டம் நிரம்பி வழியும் பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம், தீபாவளிக்கு வந்து இனிப்புகளை வாங்கி செல்வார்கள் மக்கள். அதுவும் அந்த இனிப்பு கடையில் லட்டுக்கு மிகவும் கிராக்கியாக இருக்கும், அதனால் லட்டுக்கு மிகவும் சந்தோசம் அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் கர்வமும் கொண்டு இருந்தது லட்டு. லட்டு செய்து வந்து கொட்டிய அடுத்த நிமிடம் லட்டு காலியாகி விடும். அதனால் லட்டு அனைவரிடமும் திமிராக நான் தான் உயர்ந்தவன், என்னை தான் மக்கள் விரும்பி உண்கிறார்கள் என்றது சத்தமாக.  பக்கத்தில் இருந்த கடலை மிட்டாயை மிகவும் ஏளனமாக பார்த்தது லட்டு. ஏளன சிரிப்புடன் உன்னை யாருமே வாங்க மாட்டார்கள் நீ என் பக்கத்தில் இருக்கிறாயே, நம்ம கடை முதலாளி உன்னை போய் என் பக்கத்தில் வைத்திருக்கிறாரே என்று திமிராக பேசியது.  இதை கேட்டு கொண்டிருந்த கடலை மிட்டாய் அமைதியாக சொன்னது இந்த உலகில் அனைத்திற்கும் ஒரு  காரணம்  உண்டு. அனைத்து படைப்பிற்கும்  ஒரு அர்த்தமும் பயனு...

தேடல் 11

பகுதி 11 அசதியிலும், குளிரிலும் தன்னை அறியாமல் தூங்கிய அனிதா கண் விழித்தாள். கடிகார முள் 7ல் நின்றிருந்தது, மணி 7 ஆயிடுச்சு என்ன குளிர் என்று போர்வைக்குள்ளேயே இருந்து புலம்பினாள். அப்போது தான் நியாபகம் வந்தது அவள் கண்ணுக்கு முன்னால் இருந்த கேமரா பற்றிய நினைப்பு. அவள் சற்று யோசிக்கத் துவங்கினாள், நேற்று வினய் கூறியதை நினைவு கூர்ந்தாள். என்ன கேமராவா நான் எதுவும் அனுப்பலையே என்ற வார்த்தை அவள் காதில் பலமுறை அலறலாய் ஒலித்து கொண்டே இருந்தது. பின் அலைபேசி கூப்பிடவே சற்று அதிர்ந்து தான் போனாள். ஹலோ என்றாள் அனிதா, மறுமுனையில் அனிதா ஷூட்டிங் 9 மணிக்கு ரெடியா இருங்க என்றார் இயக்குனர். சரி சார் நான் கிளம்பி ரெடியா இருப்பேன் என்றாள் அனிதா, கால் துண்டிக்கப்பட்டது. ஆனால் அனிதாவின் மனதில் அந்த கேமரா பற்றிய நினைவுகளை துண்டிக்க முடியவில்லை.  வினய்க்கு கால்  செய்தாள், பின்பு யோசித்தவளாய் வேண்டாம் வினயை எதற்கு குழப்ப வேண்டும் என்று ரிங் ஆவதற்கு முன்பே துண்டித்து விட்டாள். சரி கிளம்பலாம் என்று அனிதா கிளம்ப தயாரானாள். வினய் உமாவிற்கும், ராஜிற்கும் கான்பிரண்ஸ் கால் செய்தான், ஹலோ என்றாள் ...

தேடல் 10

பகுதி 10 அந்த கார் பின்னாடியே வினயை தொடர்ந்து வந்தது, வினய் பதட்டமாகி வேகமெடுத்தான். அந்த காரும் வேகமெடுக்க தொடங்கியது, நம்மை தான் யாரோ தொடர்ந்து வருகிறார்கள் என்று சுதாரித்துக்கொண்டு பைக்கை நிறுத்தி விட்டு சைடு கண்ணாடியை பார்த்தான் காரும் நின்றது,பின்னர் வினய் பைக்கை விட்டு இறங்கி   பின்னால் இருக்கும் காரை நோக்கி நடந்தான். வினய் அந்த காரை நோக்கி நடக்கையில் யாராக இருக்கும் என்னை எதற்கு பின் தொடர்கிறார்கள் என்ற குழப்பத்துடன் சென்றான். பின் ஒரு வேலை அவனது ஆட்களாக இருக்குமோ என்று உமாவிற்கு போன் போட்டு பிரச்சனை கொடுத்த சதீஸ் சொன்ன வார்த்தையை நினைவு கூர்ந்தான், என்மேலேயே கம்பளைண்ட் கொடுக்க வச்சுட்டேல உன்னை சும்மா விடமாட்டேனு சொன்ன வார்த்தை அவனுக்கு நியாபகம் வந்தது. காரை நெருங்கி விட்டான் ஜன்னல் கண்ணாடி திறந்ததும், ஹே என்று வினய் கையை ஓங்கி அடிக்க முயல காருக்குள் இருந்தவன் முகம் சற்று பயத்துடன் வியர்த்து கொட்டியது. வினய் ஓங்கிய கையை நிறுத்தினான், அவனுக்கு அந்த முகம் எங்கோ பார்த்த நியாபகம் யாரென்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு நினைவுக்கு வரவில்லை. பின்னர் அந...

தேடல் 9

பகுதி 9 அனிதா அவுட்டடோர் ஷூட்டிங்கிற்கு ஊட்டிக்கு கிளம்பி செல்கிறாள். வினய் வழக்கம் போல் எழுந்து வரதராஜன் வீட்டுக்கு செல்லத் தயாராகிறான். வினய் சாப்பிட வா என்று வாணி கூப்பிடும் சத்தம் கேட்கவே வினய் அவசரம் அவசரமாக கிளம்பி சென்றான், இட்லி சாம்பார் சட்னி தயாராக இருந்தது. வினய் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு பைக்கை கிளப்பினான். வரதராஜன் அவர் இடத்தில் இல்லை, வினய் அவன் இடத்தில் அமர்ந்து அவர் கொடுத்த கேஸ் பைலை படித்துக்கொண்டிருந்தான். அப்போது வரதராஜன் வரவே வினய் எழுந்தான் நீ வா என்று வினயை அழைத்துக் கொண்டு அவர் இடத்துக்கு செல்கிறார். கேஸ் பத்தி முழுசா படிச்சுட்டியா என வரதராஜன் கேட்க, படிச்சுட்டேன் என வினய் சொல்கிறான். இந்த கேஸ் பத்தி என்ன நினைக்குற என்று வரதராஜன் கேட்க, இதுல என்ன இருக்கு அவுங்க இடத்தை குடுத்துட்டு பணம் வாங்கிட்டாங்க, மாதவன் அந்த இடத்துல இண்டஸ்ட்ரி கட்டப்போறாரு, இப்போ அவுங்க அந்த இடம் தங்களுக்கே வேணும்னு கேஸ் போட்ருக்காங்க. இதுல மாதவன் மேல தப்பு இருக்குறதா எனக்கு தெரியலையே என்று வினய் சொல்லி முடித்தான்.  வரதராஜன் சிரித்துவிட்டு ஒரு வழக்கறிஞர் மாதிரி யோ...

தேடல் 8

பகுதி 8 திருடன் உமாவை வேகமாக தள்ளி விட்டதில் நிலை குலைந்து மயங்கி விழுந்தாள். அப்போது ரஞ்சித் அந்த இடத்தை வந்தடைந்தான் ஒரே கூட்டமா இருக்கே என்ன நடந்தது என்று ஒருவரிடம் கேட்க அவர் நடந்தவற்றை கூறிக்கொண்டு இந்த பொண்ணு தான் அவனை பிடிச்சு கத்துச்சு அவன் தள்ளி விட்டதில் மயக்கம் ஆயிருச்சுனு சொல்லும் போதே யாரென்று பார்த்தான் ரஞ்சித். தள்ளுங்க தள்ளுங்க என்று பார்க்கையில் மயக்கமாகி கிடந்தாள் உமா. ரஞ்சித் உமா என்று தெரிந்ததும் தள்ளுங்க தள்ளுங்க தண்ணீர் கொண்டு வாங்க விலகி நில்லுங்க காற்று வரட்டும்னு சொல்லி கூட்டத்தை கலைத்தான்.  உமாவிற்கு தலையில் லேசான காயம் உடனே ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றான் ரஞ்சித். ஸ்டேஷன்க்கு போன் செய்து நடந்தவற்றை கூறி அந்த திருடனை பற்றிய தகவலை கூறினான். டாக்டர் வெளியே வந்து ஒன்னும் பிரச்சனை இல்லை சின்ன காயம் தான், வெடுக்குனு தள்ளி விட்ட அதிர்ச்சியில மயக்கம் அவ்வளவு தான் நீங்க போய் பார்க்கலாம்னு சொல்லி விட்டு டாக்டர் நகர்ந்தார். ரஞ்சித் உள்ளே சென்றான், உமா கண் விழித்து சார் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும் எங்க ஆபீஸ்ல ஆறு பொண்ணுங்களும் சதீஸ் ம...