தேடல் 26
பகுதி 26 வினய் வாதாடியதை கேட்டு மிகவும் சந்தோசப்பட்ட வாணியிடம் அப்பா எங்கே என்று வினய் கேட்டான். அவர் அப்போவே வந்துட்டார் அவர் அறைக்கு போனவர் வெளியே வரவே இல்லை என்றாள் வாணி. உடனே வினய் சீனிவாசன் அறை கதவை திறந்தான். சீனிவாசன் ஜன்னல் வழியே அசைந்தாடும் மரக்கிளையை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார், இல்லை இல்லை எதையோ உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார். வினய் பக்கத்தில் வந்து அப்பா என்றதும் சீனிவாசன் நினைவு வந்தவராய் வாப்பா வினய், நீ நல்ல வாதாடின வரதராஜன் பெயரை காப்பாற்றி விட்டாய் என்று வினயை கட்டித்தழுவி பாராட்டினார் சீனிவாசன். ரெம்ப நன்றி என்று சொல்லிவிட்டு வினய் எதையோ கேட்கத் தயங்கி நின்றான். என்ன வினய் எதுவும் என்னிடம் கேட்கணுமா என்று சீனிவாசன் கேட்டார், ஆமா அப்பா அது வந்து என்று வினய் இழுக்க, என்னப்பா கேளு என்றார் சீனிவாசன். அப்பா நீங்க ஒரு வேளை நான் வாதாடுறேனு விட்டு கொடுத்திடீங்களா என்று திக்கி திணறி வினய் கேட்டு விட்டான். சீனிவாசன் சிறிதாக சிரித்து விட்டு, இது நம் தொழில் அவரவர் தொழில் அவர்களுக்கு கடவுள் போன்றது. அதைபோல் தான் எனக்கு...