Posts

Showing posts from June, 2017

Facebook page

தேடல் 16

பகுதி 16 டாக்டர் வினயை அழைத்து வரதராஜன் உடல்நிலையை பற்றி விளக்கி கொண்டிருந்தார், அவர் உயிருக்கு ஆபத்தில்லை ஆனால் அவர் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். தலையில் பலமா அடிபட்டதால கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். உங்களுக்கே தெரியும் கோமால இருக்குறவங்க எப்போ அதுல இருந்து மீண்டு வருவாங்கனு சொல்ல முடியாது என்று டாக்டர் கூறி விட்டு சென்றார். டாக்டர் கூறி சென்றதும் வினய் மிகவும் குழம்பி போனான், இப்போ என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்போதைக்கு வழக்கை தள்ளிப்போட செய்யலாம் ஆனால் கோர்ட்டில் குத்துமதிப்பாக ஒரு காலநேரம் சொல்லி ஆகவேண்டுமே இப்போ என்ன செய்வது மிகவும் குழம்பித்தான் போனான் வினய். சரி இப்போதைக்கு அப்பாவிடம் இதை பற்றி பேசுவோமே என்று கிளம்பினான்.                                                         கோர்ட் - வெள்ளிக்கிழமை  வெள்ளிக்கிழமை காலை 10 மணி அனைவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாதவன், ஜெகன் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மூவரின் முகத...

தேடல் 15

பகுதி 15 வினய் பைக்கில் கிளம்பினான், சிறிது தூரம் சென்று கொண்டிருக்கையில் செல்போன் ஒலித்தது, ஹலோ என்றான், தம்பி வரதராஜன் அய்யா வந்த வண்டி ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு தம்பி என்று அழுதுகொண்டே சொன்னார் அய்யாசாமி. வினய் அதிர்ச்சியானான். உடனே பைக்கை கிளப்பி ஹாஸ்பிடலுக்கு வந்தடைந்தான். அய்யாசாமி நின்று அழுதுகொண்டிருந்தார், அண்ணே என்னாச்சு தெரியல தம்பி அய்யா கிளம்பி போன கொஞ்ச நேரத்துல ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு போன் வந்தது. அப்படியே கிளம்பி இங்க வந்துட்டேன் என்று அய்யாசாமி அழுதுகொண்டே சொன்னார். அப்போ டிரைவர் எங்க? என்று வினய் கேட்க தெரியலையே தம்பி என்றார் அய்யாசாமி. சரி இப்போ வரதராஜன் சார் எப்பிடி இருக்கார் என்று வினய் கேட்க, டாக்டர் உள்ள பார்த்துகிட்டு இருக்காங்க இன்னும் வெளியே வரவே இல்ல என்று தேம்பி தேம்பி அழுதுகொண்டே சொன்னார் அய்யாசாமி. அப்போது ஒரு போலீஸ் வந்து சார் இது அவருடைய ஃபைல், கண்ணாடி, மொபைல் என்று வந்து நீட்டினார். வினய் அவரிடம் சார் எப்படி இது நடந்தது என்று வினய் கேட்க, அந்த போலீஸ்காரர் தெரியலை தம்பி சம்பவம் நடந்த இடத்துல யாருமே இல்லை, யாரும் எதுவும் பார்க்கலை. நம்ம போலீஸ் வண...

தேடல் 14

பகுதி 14 ஊட்டியில் இருந்து வினய் வீட்டை அடைந்ததும் ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. வினய் அவன் அறையில் குளித்து முடித்து கிளம்பிக்கொண்டு இருந்தான். அப்போது  வினயின் அம்மா வாணி வந்து வினய் வரதராஜன் வீட்டுக்கு இனிமேல் போக வேண்டாம்ப்பா என்றாள். வினய் தலை வாரிக் கொண்டு இருந்தவன் திரும்பி என்னமா இப்படி சொல்றீங்க என்னாச்சு என்றான் வினய் ஆச்சர்யமாக!!  இல்ல வினய் நீ வந்ததும் சொல்லலாம்னு இருந்தேன் ஆனால் சொல்ல முடியலை என்று இழுத்தாள், என்னமா சொல்ற என்னாச்சு என்ன தான் பிரச்சனை சொல்லுங்க என்றான் குழப்பமாக, அப்போது  சீனி வாசன் உள்ளே நுழைந்தார்,அது ஒண்ணுமில்லடா வரதராஜன் ஆபீஸ்ஸா யாரோ எரிச்சுட்டாங்களாம் அந்த பயத்துல தான் உங்க அம்மா இப்படி பயப்படுறா என்றார் சீனிவாசன். அய்யோ ஆபீஸ்ஸா எரிச்சுட்டாங்களா, வரதராஜன் சார்க்கு என்ன ஆச்சு என்று மிகவும் பதட்டமானான் வினய். பயப்படாத அவருக்கு ஒன்னும் ஆகலை ஆனால் அவர் வச்சிருந்த டாக்குமெண்ட் எல்லாம் எரிஞ்சு போச்சுன்னு சொன்னார். சரி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டான். அப்போது வாணி என்னடா நான் போக வேண்டாம்னு சொ...

தேடல் 13

பகுதி 13  வினயும் அனிதாவும் காதலிக்கிறார்கள் என்று கேட்டவுடன் வருணின் முகம் மாறியது, என்ன நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என்றான். ஆமா என்றான் வினய். வருண் டென்ஷன் ஆனான், நான் அனிதாவை காலேஜ் படிக்கும் போது இருந்து லவ் பண்றேன் நீ என்னனா இப்போ வந்து லவ் பன்றேன்னு சொல்ற, ஒழுங்கு மரியாதையாய் அனிதாவை விட்டு விலகிடு இல்ல எப்படி விலக்கணுமோ அப்படி விலக்கிருவேன் என்று வருண் சொல்ல சொல்ல வினய்க்கு அதிர்ச்சியாய் இருந்தது. வருண் வினயின் பக்கம் வந்தான் வினயின் தோளில் கை போட்டு வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தான். வினய்க்கு ஆச்சர்யமாக இருந்தது அதிர்ச்சியிலேயே இருந்தான். என்ன வினய் ஆச்சர்யமா இருக்கா, என்னடா இவ்வளவு நேரம் மிரட்டுற மாதிரி பேசுனவன் இப்போ வாழ்த்துக்கள் சொல்றனேனு பார்க்கிறீர்களா, இந்த கதையில நான் வில்லன் இல்லை பாஸ் என்றான் வருண் சிரித்துக்கொண்டே. வினய் வருணை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தான், நான் வில்லன் இல்லை என் அப்பா அம்மாவும் பணம் புகழ் இருந்தாலும் என்னை ரெம்பவும் ஒழுக்கமா தான் வளர்த்துருக்காங்க என்றான் வருண். அனிதா பின்னாடி சுத்துனேன் காதலிச்சேன் என்னைக்க...

தேடல் 12

பகுதி 12 இவர் தான் பூங்கொத்து கொடுத்தார் என்றதும், அனிதாவின் பார்வை அங்கு திரும்ப அந்த உருவம் நெருங்கி வந்தது. அருகில் வர வர அனிதாவிற்கு தூக்கி வாரி போட்டது. அது வேறு யாருமல்ல அனிதா காலேஜ் படிக்கும் போது அவளை சுற்றி சுற்றி வந்த வருண்.  அருகில் வந்ததும் வாரணம் ஆயிரம் சூர்யா போல் தரையில் முட்டி போட்டு இரு கைகளையும் விரித்து I LOVE YOU அனிதா என்று சினிமா பாணியில்  அவன் சொல்லி முடித்தான். அனிதாவிற்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை, அந்த சமயம் வினய், உமா ,ராஜ் வந்தனர். அனிதாவின் முன் வருண் முட்டியிட்டு ப்ரொபோஸ் செய்ததை பார்த்து அனைவரும் திகைத்து போய் நின்றனர். அப்போது வருண் இவர்களை பார்த்தான், ஹாய் உமா எப்பிடி இருக்க இவ்வளவு ஸ்லிம் ஆகிட்டயே என்றதும் உமாவிற்கு சந்தோசம் தாங்கவில்லை. காலேஜ் படிக்குறப்போ ரெம்ப குண்டா இருப்பியே என்றான் வருண். ராஜ் மனதிற்குள் என்ன இது ஸ்லிம்மா என்று மனதிற்குள் சிரிப்பை அடக்கி கொண்டு, நீங்க யார் சார் என்றான்.  நான் வருண் உமா, அனிதாவோட காலேஜ் பிரென்ட் என்றான். அப்போது தான் வினய்க்கு நியாபகம் வந்தது வருணை பற்றி உமாவும், அனிதாவும் சொல்லி இர...