Posts

Showing posts from July, 2017

Facebook page

தேடல் 20

பகுதி 20 வினய் இரவு வரதராஜன் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டே தூங்கினான், இரவு ஒரு 3 மணி அளவில் வினய்க்கு முழிப்பு வந்தது அருகில் தண்ணீர் பாட்டிலை தேடினான் அதில் தண்ணீர் இல்லை. உடனே சமயலறைக்கு சென்று தண்ணீர் அருந்திவிட்டு வந்து படுத்தான். அப்போது அவனுக்கு போன் கால் வந்தது, வினய் யார் அது இந்த நேரத்தில் என்று ஹலோ என்றான், அடுத்த முனையில் வினய் நீ பயப்படாமல் இந்த கேஸ் எடுத்து எனக்கு பதிலாக வாதாடு என்று குரல் கேட்டது, வினய் யாரென்று கேட்டான், அந்த குரல் வரதராஜன் என்றது வினய்க்கு தூக்கி வாரி போட்டது.  சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தான் மணி 7 ஆகி இருந்தது, வினயின் முகம் வியர்த்து கொட்டியது மனசு படபடத்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு நாம் கண்டது கனவு என்று மனசை தேற்றிக்கொண்டான். இருந்தாலும் வரதராஜன் கேஸ் எடுத்து வாதாடுவது என்று முடிவுக்கு வந்தான்.  இன்னும் 2 நாட்களே உள்ளன வழக்கு வருவதற்கு அதற்குள் அனைத்தையும் தயார் செய்ய வேண்டும் என்று மனதில் யோசித்து கொண்டான். விவசாயிகளை பார்க்க சென்றான் அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் சேகரித்து கொண்டான். வீட்டில் அம்மா வாணியையு...

தேடல் 19

பகுதி 19 அனைவரும் ராஜுவுக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயம் ராஜ் சேனலில் வேலைக்கு சேர எடுத்த சாம்பிள் வீடியோவை உமாவிற்கும், வினய்க்கும் கட்டினான். உமா பார்த்து விட்டு பாராட்டினாள். ஆனால் வினய் வீடியோவை வைத்த கண் வாங்காமல் மறுபடி மறுபடி பார்த்து கொண்டிருந்தான். என்னடா வினய் நல்லா எடுத்துருக்கேனா திருப்பி திருப்பி பார்க்குற என்றான் ராஜ். அதற்கு வினயிடம் எந்த பதிலும் இல்லை அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு குழம்பினர். மீண்டும் வினய் என்று ராஜ் கூப்பிட வினய் கண்டுகொள்ளவே இல்லை அந்த வீடியோவை பார்த்துக்கொண்டே இருந்தான். ராஜ் மறுபடி டேய் வினய் என்னடா ஆச்சு வினய் என்று அவனை உலுக்க ஆரம்பித்தான். அப்போது தான் வினய் நினைவு வந்தவனாய் உணர்ந்தான். என்னடா ஆச்சு என்றான் ராஜ், இல்லை இந்த வீடியோ இன்னைக்கு எடுத்ததா என்றான் வினய். ஆமாடா காலையில வீடியோ எடுத்துட்டு வர சொன்னாங்க அதான் நானும் போய் எடுத்துட்டு வந்தேன் இதை பார்த்துட்டு தான் வேலை கொடுத்தாங்க என்னடா என்னாச்சு என்றான் ராஜ். இல்ல இதுல ராஜா போறத பார்த்தேன் அதான் அவர் தானானு கண்டுபி...

தேடல் 18

பகுதி 18 வினய் வரதராஜன் அருகில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான், என்ன செய்வது என்று தெரியாத ஒரே குழப்பத்தில் இருந்தான். அப்போது வரதராஜன் கண்களில் அசைவு இருப்பதாய் கண்டான், வினய்கு ஆச்சர்யம் உடனே அருகில் சென்று சார் என்று கூப்பிட வழக்கு என்ன ஆனது என்றார், வினய் உடனே இருபது நாட்கள் தள்ளி வச்சுருக்காங்க உங்க உடல்நிலை கருதி என்று சொல்லி முடிப்பதற்குள் நீ எனக்கு பதிலா வாதாடு என்று சொல்லிவிட்டு கண் மூடினார் வரதராஜன். வினய்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, உடனே டாக்டரை கூப்பிட்டான். டாக்டர் வந்து பார்த்து விட்டு உண்மையாகவே கண் விழித்தாரா இல்லை உங்கள் மனப்பிரமையா என்றார், சார் இல்லை இப்போதான் கண் விழித்து என்கிட்ட பேசினார் என்றான் வினய். டாக்டர்க்கு வினய் மேல் நம்பிக்கை இல்லை, இது மாதிரி நிறைய பேர் பார்த்துருக்கோம் இவ்வளவு சீக்கிரம் அவர் கண் விழிக்க சான்ஸ் இல்லை. ஒரு வேளை அவர் கண் விழித்து பேசினார் என்றால் நல்ல முன்னேற்றம் தான் என்று சொல்லி கிளம்பி விட்டார் டாக்டர். அய்யாசாமி உள்ளே பதறி கொண்டே உள்ளே நுழைந்தார், என்னாச்சு தம்பி டாக்டர் வந்து போறார் என்னாச்சு என்று பதறினார். ஒண்ணு...

தேடல் 17

பகுதி 17 ராஜ் சொன்னது போல அப்பாவையே இந்த கேஸ்ல வாதாட வச்சுடனும் என்று சந்தோசமாக புறப்பட்டான். ஆனால் அவன் வீட்டில் எதிர்பாராத ஒன்று நடந்து கொண்டிருந்தது, வீட்டை அடைந்தான் நிறைய கார்கள் நின்றிருந்தன. வினய்க்கு மிகவும் ஆச்சர்யம் என்ன இது இந்த ராத்திரி நேரத்துல இவ்வளவு கார்கள் நம்ம வீட்டில் நிற்குதே என்று குழப்பத்துடனும் ஆச்சர்யத்துடனும் வீட்டிற்குள் நுழைந்தான் வினய். அவன் நுழைந்ததும் மாதவன் வினயின் அப்பா சீனிவாசனிடம் இந்த கேஸ்ல நீங்க தான் வாதாடனும் என்று அட்வான்ஸ் மற்றும் இந்த கேஸ் பத்திய ஃபைல்ஸ் நீட்டினான். வினய் நுழைவதற்கும் சீனிவாசன் மாதவனிடம் சரி நான் வாதாடுறேன் என்று சொல்வதற்கும் சரியாய் இருந்தது. அப்போது தான் வினய்க்கு அனைத்தும் புரிய ஆரம்பித்தது, ஓஹோ மாதவன் ஆட்களுடன் வந்து அப்பாவை வழக்கில் வாதாட கேட்டு வந்திருக்கிறான் என்று அதிர்ந்து போனான். அப்போது மாதவன் வினய் பக்கம் திரும்ப, இது யாரென்று தெரியாதது போலக்கேட்க, இது என் மகன் என்று சீனிவாசன் சொன்னார். ஆமா நான் கூட பார்த்துருக்கேன் கோர்ட்ல வரதராஜன் சார் கூட வருவாரே அந்த தம்பி தானே என்று நக்கலாக கேட்க ஜெகன் சிரிக்க ஆரம்பித்தா...